திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1487 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள் என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் – என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே) 10 | பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –6-4-10 | பதவுரை Show / Hideபிறை சேர் நுதலார், Pirai Ser Nudhalaar - சந்திரகலைபோன்ற நெற்றியை யுடையரான பெண்கள் நம்மை, Nammai - நம் விஷயத்தில் பேணுதல் இலாத முன், Penuthal Iladha Mun - ஆதரவைத் தவிர்த்துக் கொள்ளும்படியான கிழத்தனம் வருவதற்கு முன்னே, நெஞ்சமே, Nenjamai - ‘ஓ மனமே! நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு என்ற, Nirai Ser Pozhil Soozh Naraiyoor Thozha Enra - தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநறையூரை வணங்கு’ என்று உபதேசித்தவரும். கறை ஆர் நெடு வேல், Karai Aar Nedu Vel - ரத்தக்கரை நிரம்பிய நீண்ட வேற்படையை யுடையவரும் மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வாருடைய சொல், Sol - இந்த ஸ்ரீஸூக்திகளை மறவாது உரைப்பவர், Maravathu Uraippavar - மறவாமல் ஓதுமவர்கள் வானவர்க்கு, Vaanavarkku - நித்ய ஸூரிகளுக்கும் இன் அரசு ஆவர், In Arasu Aavar - மேற்பட்டவர்களாவர். |