திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1488 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1488பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவர்கள் புஜிக்கப் பெற்றது தன் பேறு என்னும் இடம் வடிவில் புகரிலே தோற்ற இருக்கிறவன் – அம்ருதத்தை புஜிக்கிற இவர்கள் உடைய விரோதியைப் போக்குகைக்காக கையிலே திவ்ய ஆயதங்களை தரித்துக் கொண்டு இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம்) 1
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர் நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –6-5-1
பதவுரை Show / Hide
முந்நீர், Munnir - ஸமுத்ரத்தை
கலங்க, Kalanga - கலங்கும்படியாக
கடைந்து, Kadaindhu - கடைந்து
அமுதம் கொண்டு, Amudham Kondu - (அதில் நின்று அமுதமெடுத்து
இமையோர் துளங்கல் தீர நல்கு, Imayor Thulankal Theera Nalku - தேவர்களின் கலக்கம் தீரும்படியாக (அவர்களுக்குக்) கொடுத்தருளியவனும்
சோதி சுடர் ஆய், Sothi Sudar Aay - பரஞ்சோதியா யுள்ளவனும்
வலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையான், Valangai Aazhi Idangai Sangam Udaiyaan - வலத்திருக்கையில் திருவாழி யையும் இடத்திருக்கையில் திருச்சங்கையும் உடையவனுமான எம்பெருமானுடைய
ஊர், Oor - திவ்ய தேசம்
நலம் கொள் வாய்மை, Nalam Kol Vaimai - நன்மை கொண்ட ஸத்யவாதித்வத்தை யுடையவரான
அந்தணர், Andhanar - பிராமணர்கள்
வாழும், Vazhum - வாழுமிடமான
நறையூர், Naraiyoor - திருநறையூராகும்.