திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1490 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்தஸ்ரீ தசரதாத்மஜன் வர்த்திக்கிற ஊர்) 3 | ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே –6-5-3 | பதவுரை Show / Hideஆனை புரவி தேரொடுகாலாள் அணிகொண்ட, Aanaipuravi Therodukalaal Anikonda - யானைகளும் குதிரைகளும் தேர்களும் காலாள்களுமாக அணிவகுக்கப்பட்ட சேனை தொகையை சாடி, Senaithogaiyai Saadi - சேனைக் கூட்டத்தைச் சிதைத்து இலங்கை செற்றான், Ilankai Settran - இலங்காபுரியை அழித்த பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்) மீனை, Meenai - மீன்களை தழுவி, Thazhuvi - (பிடிப்பதற்காக) இரண்டு கைகளாலும் அணைத்து வீழ்ந்து, Veelndhu - (பின்பு அவற்றால் தள்ளுண்டவர்களாய்க்)கீழே விழுந்து எழும், Ezhum - (பின்னும் அவற்றைப் பிடிக்க ஆசையினால்) எழுந்திருக்கிற மீனவர்க்கு, Meenavarkku - உழவர்களுக்கு அலமந்து, Alamandhu - அஞ்சி ஆமை, Aamai - ஆமையானது நானம் புதலில், Naanam Puthalil - மஞ்சள் புதரிலே ஒளிக்கும், Olikkum - ஒளிந்துகொள்ளுமிடமான நறையூர், Naraiyoor - திருநறையூராம். |