திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1495 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1495பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேநா சமூஹமானது முடிந்து போம்படியாகவும்-ஜயத்ரதன் தலை அறுப்புண்ணும் படியாகவும் ஆஸ்ரிதன் உடைய பிரதிஞ சம காலத்திலேயே வந்து உதவின ஓரத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 8
வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த விமலனூர் கொள்ளைக் கொழு மீன் உண் குருகோடிப் பெடையொடும் நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே –6-5-8
பதவுரை Show / Hide
வெள்ளைப்புரவி தேர் விசயற்கு ஆய், Vellai Puravi Ther Visayarku Aayi - வெள்ளைக்குதிரைகள் பூட்டின தேரையுடையனான
விசயற்கு ஆய், Visayarku Aayi - அர்ஜுநனுக்காக
விறல் வியூகம் விள்ள, Virhal Viyugam Vill - (எதிரிகளினுடைய) மிடுக்கையுடைத்தான ஸேனாஸமூஹம் தொலையும்படியாகவும்
சிந்து கோன் விழ, Sindhu Kon Vizha - ஸிந்து தேசத்தலைவனான ஜயத்ரதன் முடியும்படியாகவும்
ஊர்ந்த, Oorntha - (தேரை) நடத்தின
விமலன், Vimalan - பரிசுத்தனான பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
கொள்ளை கொழுமீன் உண் குருகு ஓடி, Kollai Kozhumeen Un Kurugu Odi - மிகுதியாகக் கொழுத்த மீன்களைப் பிடித்துண்கிற கொக்குகள் ஓடிச்சென்று
பெடையோடும், Pedaiyodum - தம் பேடைகளோடகூட
நள்ளக் கமலம் தேறல் உருக்கும், Nallak Kamalam Therhal Urukkum - செறிந்த இதழ்களைடைய தாமரைப்பூவில் தேனைப் பருகப்பெற்ற
நறையூர், Naraiyoor - திருநறையூர்