திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1497 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செப்புமவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் –இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்) 10 | தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே –6-5-10 | பதவுரை Show / Hideதுளபம் தாமம் நீள் முடி, Thulabam Thaamam Neel Mudi - திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலே யுடையனான மாயன் தான் நின்ற, Maayan Thaan Nindra - ஸர்வேச்வரன் நித்யவாஸம் பண்ணப்பெற்றதும், நாமம், Naamam - புகழ்பெற்றவைகளாய் திரள் மா மாளிகை, Thiral Maa Maaligai - நெருங்கியிருக்கின்ற பெரிய திருமாளிகைகளினால் சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்டதுமான நறையூர்மேல், Naraiyoor Mel - திருநறையூர் விஷயமாக,- காமம் கதிர்வேல் வல்லான் கலியன், Kaamam Kathirvel Vallaaan Kaliyam - மிகக் வொளிபொருந்திய வேற்படையைப் பிடிக்க வல்லவரான திருமங்கையாழ்வார் ஒலி மாலை, Oli Maalai - அருளிச்செய்த இச்சொல் மாலையை செப்புமவர்க்கு, Seppumavarkku - ஓதவல்லவர்களுக்கு திருமால், Thirumaal - திருமகள் கொழுநனான ஸர்வேச்வரன் சேமம் துணை ஆம், Semam Thunai Aam - எப்போதும் ரக்ஷகனான ஸஹாயபூதனாக ஆவன். |