திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1498 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1498பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செம்பியன் கோச் செங்கணான் -அவன் தனக்கு பெயர்-அவனுடைய அகடிதகட நா சாமர்த்தியம் உடன் இந்த வண்டுகள் மகிழம் பூவிலே படிந்த இத்துடன் வாசி அற உத்தேச்யமாய்த்து இருக்கிறது இவருக்கு அவ் ஊரில் உள்ளதாகையாலே) 1
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1
பதவுரை Show / Hide
அம்பரமும், Ambaramum - ஆகாசத்தையும்
பெரு நிலனும், Peru Nilanum - பரந்த பூமியையும்
திசைகள் எட்டும், Thisaigal Ettum - எட்டுத்திக்குகளையும்
அலை கடலும், Alai Kadhalum - அலையெறிகின்ற கடல்களையும்
குலம் வரையும், Kulam Varaiyum - குலபர்வதங்களையும்
உண்ட, Unda - உட்கொண்ட
கண்டன், Kandan - திருக்கழுத்தையுடையவனும்
கொம்பு அமரும், Kombu Amarum - கிளைகள் பொருந்திய
வட மரத்தின், Vada Marathin - ஆலமரத்தினுடைய
இலை மேல், Ilai Mel - தளிரின் மீது
பள்ளி கூடினான், Palli Koodinaan - சயனித்துக்கொண்டவனுமான ஸர்வேச்வரனுடைய
திரு அடியே, Thiru Adiye - திருவடிகளையே
கூட கிற்பீர், Kooda Kirbeer - அடையவேணுமென்றிருப்பவர்களே!,
மணி வண்டு, Mani Vandu - அழகிய வண்டுகள்
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு, Vambu Avizhum Senbagathin Vaasam Undu - அப்போதலர்கின்ற செண்பகப் பூவின் பரிமளத்தைப் புஜித்து (பின்பு)
வகுளத்தின் மலர் மேல் வைகு, Vakulathin Malar Mel Vaiku - மகிழம்பூவின் மீது தங்கி யிருக்கப்பெற்றதும்.
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில், Sembiyan Ko Senganaam Serndha Koyil - ‘செம்பியன் கோச்செய்கணான்’ என்னும் சோழராஜன் பணிசெய்யப்பெற்ற கோயிலுமான
திருநறையூர் மணிமாடம், Thirunaraiyoor Manimaadam - திரநறையூரிலுள்ள திவ்ய ஸந்நிதியை
சேர்மின்கள், Serminkal - போய்ச்சேங்கள்.