திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1501 | பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்கினதோடு இவன் யுத்தத்தில் வ்யாபரித்ததோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு) 4 | பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்
வெங்கண் மா களிருந்தி விண்ணி யேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-4 | பதவுரை Show / Hideபைங் கண், Paing Kan - பசுமையான திருக்கண்களையுடைய (- (செங்கணான் கோ சோழந்;) (சேர்ந்த கோயில்;) (திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள்.)) ஆள் அரி உரு ஆய், Aal Ari Uru Aayi - நரஸிம்ஹரூபியாகி வெருவ நோக்கி, Veruva Nookki - (எதிரிகள்) அஞ்சும்படி விழித்து வரம் பரு தோள் இரணியனை, Varam Paru Thol Iraniyanai - பெற்ற வரங்களினால் பருத்த புஜங்களையுடையனான இரணியாசுரனை பற்றி வாங்கி, Patri Vaangi - பிடித்திழுத்து அம் கை, Am Kai - அழகிய திருக்கைகளிலுள்ள வாள் உகிர் றுதியால், Vaal Ukir Rudhiyal - ஒளிபொருந்திய நகங்களின் நுனியினால் அவனது ஆகம், Avanadhu Aagam - அவ்விரணியனுடைய சரீரத்தில் நின்றும் அம் குருதி பொக்குவித்தான், Am Kuruthi Pokkuviththaan - அழகிய ரத்தத்தை வெள்ளமிடச்செய்த பெருமானுடைய அடி கீழ் நிற்பீர், Adi Keezh Nirbeer - திருவடிகளின் கீழ் நிற்க விருப்பமுடையவர்களே!, வெம் கண் மா களிறு உந்தி, Vem Kan Maa Kaliru Undhi - வெவ்விய கண்களை உடைய பெரிய யனைகளைத் தள்ளிக்கொண்டு வெண்ணி ஏற்ற, Vennni Aetra - வெண்ணியென்னுமிடத்தில் எதிர்த்து வந்த விறல் மன்னர், Virhal Mannar - சூரர்களான அரசர்கள் திறல் அழிய, Thiral Azhiya - வலிமாளும்படியாக வெம் மா உய்த்த, Vem Maa Uyththa - கடுங்குதிரைகளை நடத்தி வெற்றி பெற்றவனான |