திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1502 | பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் பூமியை அடைய அளந்து கொண்டத்தோடு இவன் பூமியை அடையத் தானே நெருக்கி ஆண்டத்தோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு அவனை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே) 5 | அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-5 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொரு காலத்தில் (- (அதற்கு மேலே) (சோழன், சேர்ந்த, திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள்-)) உலகம் மூன்றினையும், Ulagam Moondrinaiyum - மூவுலகங்களையும் அளந்து, Alandhu - (திரிவிக்கிரமனாய்) அளந்து கொண்டவனும் வேறு ஓர் அரி உரு ஆய், Veeru Oru Ari Uru Aay - விலக்ஷ்ணமானவொரு நரஸிம்ஹரூபியாகி இரணியனது, Iraniyanathu - ஹ்ஹிரண்யாஸுரனுடைய ஆகம், Aagam - உடலை கீண்டு, Keendu - இருபிளவாகப் பிளந்து வென்று, Vendru - வெற்றிபெற்று அவனை விண் உலகில் செல உய்த்தார்க்கு, Avanai Vin Ulakil Sela Uyththarkku - அவ்விரணியனை வீரஸ்வர்க்கத்திற்குப் போகவிட்டவனுமான ஸர்வேச்வரனுக்கு விருந்து ஆவீர், Virundhu Aaveer - விருந்தினராக ஆகவேண்டியிருக்குமவர்களே!, மேல் எழுந்து, Mel Ezhunthu - கிளர்ந்துகொண்டு விலங்கல் பாய்ந்து, Vilangkal Paayndhu - (இடையே தடையாக நின்ற) மலைகளை உடைத்துக்கொண்டு வந்து பொன் சிதறி, Pon Sidhari - பொன்களை எங்கும் இறைத்துக்கொண்டு மணி கொணர்ந்து, Mani Konarnthu - (மற்றும் பல)ரத்னங்களைத் திரட்டிக்கொண்டு வந்து கரை மேல், Karai Mel - கரைகளின் மீது சிந்தி, Sindhi - விழவிட்டு புலம், Pulam - வெளிநிலங்களிலெங்கும் பரந்து, Parandhu - வியாபித்து(இப்படி) நிலம் பரக்கும், Nilaam Parakkum - பூமியெங்கும் பரவுகின்ற பொன்னி, Ponni - திருக்காவேரியையுடைத்தான நாடன், Naadan - நாட்டுக்குத் தலைவனாய் தென் தமிழன், Then Tamizhan - தென் திசையிலுள்ள தமிழ்நாட்டுக்கரசனாய் வடபுலம் கோன் –, Vadapulam Kon - வடநாட்டுக்கும் அரசனான |