திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1504 | பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரிய ஆண் பிள்ளை யானவன் அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக ஆஸ்ரயிக்கிற தேசம்) 7 | முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-7 | பதவுரை Show / Hideபேய்ச்சி, Peychchi - பூதனையானவள் (- (சேர்ந்த, கோயில், திருநறையூர் மணிமாடம்) (சேர்மின்கள்-.)) துஞ்ச, Thunja - மாளும்படியாக தடமுலை, Tadamulai - (அவளது) பருத்த முலையிலுள்ள நஞ்சு உண்டு, Nanju Undu - விஷத்தை உட்கொண்டவனும், முது துவரை, Muthu Thavarai - பிராசீனமான துவாரகைக்கு குலபதி ஆய், Kulapathi Aay - தலைவனாய்த் திருவவதரித்து காலி பின்னே, Kaali Pinne - பசுக்களின் பின்னே தட, Tada - பெரிய இலை குழல், Ilai Kuzhal - இலையாலே செய்யப்பட்ட குழலை ஊதி, Oothi - ஊதிக்கொண்டு போனவனும், ஆயர் மாதர், Aayar Maathar - இடைப்பெண்களினுடைய வளை இனம், Valai Inam - வளைத்திரள்களை கொண்டான், Kondaan - (விளையாட்டாக) அபஹரித்தவனுமான எம்பெருமானுடைய அடி கீழ், Adi Keezh - திருவடிகளின் கீழே எய்த கிற்பீர், Eytha Kirbeer - கி்ட்டி ஆச்ரயிக்க விருப்பமுடையவர்களே!, மலை தடத்த, Malai Thadatha - மலைப்பிராந்தங்களிலுண்டான மணி, Mani - ரத்னங்களை கொணர்ந்து, Konarndhu - திரட்டிக்கொண்டு வந்து வையம் உய்ய, Vaiyam Uyy - உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும்படி வளம் கொடுக்கும், Valam Kodukkum - மிகுதியாக கொடுக்கின்றதாய் வரு, Varu - பெருகிவருமதான புனல், Punal - தீர்த்தத்தையுடைத்தாய் அம், Am - அழகியதான பொன்னி, Ponni - திருக்காவேரியையுடைய நாடன், Naadan - நாட்டுக்குத் தலைவனாய் சிலை, Silai - வில்லை தட கை, Tada Kai - பெரிய கையிலுடையவனாய் குலம் சோழன், Kulam Sozhan - சிறந்தவனான சோழராஜன் |