திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1506 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1506பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபய விபூதியினுடைய ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன் ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாக கோயிலை வாசஸ் ஸ்தானமாக கொண்டு இருக்கிறவன் – தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய் அத்விதீயமான ஸ்த்ரீத்வத்தை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் – கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருக்கிற ஸ்ரீ சநகாதிகள் யேத்துகையால் வந்த பெருமையை உடையவன் – அனுபவிப்பாருக்கு இழிந்த இடம் எங்கும் துறையாகும் படியாய் இருக்கிற ஆயிரம் திரு நாமங்களை உடையவன் – ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் பெருமையைக் கேட்க வேண்டி இருப்பீர் நறையூர் மணி மாடம் சேர்மின்களே) 9
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-9
பதவுரை Show / Hide
தார் ஆவன், Thar Aavan - மாலையணிந்துள்ளவனும் (- (கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர்) (மணிமாடம் சேர்மின்கள்-,))
தண் அரங்கம் ஆவன், Than Arangam Aavan - குளிர்ந்த திருவரங்கமாநகரை ஆள்பவனும்
பூமேல் தனி ஆளன், Poomeel Thani Aalan - தாமரைப்பூவிற் பிறந்து ஒப்பற்றவளான பிராட்டியை ஆள்பவனும்
முனீயாளர் ஏத்த நின்ற பேர் ஆளன், Muniyaalar Aettha Nindra Per Aalan - மஹர்ஷிகள் துதிக்குப்படியாயுள்ள பெருமைவாய்ந்தவனும்
ஆயிரம் பேர் உடைய ஆளன், Aayiram Per Udaiya Aalan - ஸஹஸ்ரநாமங்களை வாசகமாகக் கொண்ட ஸ்வாமியும்
பின்னைக்கு மணவாளன், Pinnaikku Manavaalan - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனுமான எம்பெருமானுடைய
பெருமை, Perumai - பெருமைகளை
கேட்பீர், Kaetbeer - கேட்கவேண்டியிருக்குவர்களே!,
ஆவர் இவர் என்று பார் ஆளர், Aavar Ivar Endru Paar Aalar - இன்னாரின்னாரென்று ப்ரஸித்தராய்க்கொண்டு பூமியை ஆள்பவராய்
அழுந்தை, Azhundhai - திருவழுந்தூரிலே வந்து
ஏற்ற, Etra - எதிரிட்டவர்களான
படை மன்னர், Padai Mannar - ஆயுதபாணிகளான அரசர்களின்
உடல் துணிய, Udal Thuniya - சரிரங்கள் துணிபடும்படி
பரிமா உய்த்த, Parimaa Uyththa - குதிரைப்படைகளைச் செலுத்தினவனும்
தேர் ஆளன், Ther Aalan - தேர் வீரனுமான