திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1509 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இருபத்தொரு படி கால் ஷத்ரிய வம்சத்தை அறுத்துத் தூவும்படி அத்விதீயமான வாயை உடைய மழுவை ஆயுதமாக நிர்வஹித்து –ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன்) 2 | முனியாய் வந்து மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை யாண்ட தாரார் தோளான் வார் புறவில்
பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட
நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே –6-7-2 | பதவுரை Show / Hideமுனி ஆய் வந்து, Muni Aay Vandhu - பரசுராம முனியாய்த் திருவவதரித்து (- (நறையூர், நின்ற நம்பி-,)) மூவெழுகால், Moovizhughaal - இருபத்தொரு தலைமுறையளவும் முடி சேர்மன்னர் உடல் துணிய, Mudi Chermannar Udal Thuniya - முடியுடையரான க்ஷத்ரியர்களின் சரீரங்கள் தொலையும்படியாக தனி வாய் மழுவின்படை ஆண்ட, Thani Vaai Mazhuvinpadai Aanda - ஒப்பற்ற (கூர்மையான) வாயையுடைத்தான கோடாலிமைய ஆயுதமாகக் கொண்டவனும் தார் ஆர் தோளான், Thaar Aar Tholaan - மாலையணிந்த திருத்தோள்களையுடையனுமான பெருமான்,- வார் புறவில், Vaar Puravil - அகன்ற சோலைப்புறத்திலே ஒருபால், Orupaal - ஓரிடத்தில் பனி சேர் முல்லை, Pani Cher Mullai - குளிர்ந்த முல்லைப் பூக்களானவை பல் அரும்ப, Pal Arumba - (அவ்வூரிலுள்ள மாதர்களின் பற்கள் போன்று அரும்பு செய்யப்பெற்றதும் பானல், Paanal - கருங்குவளைப் பூக்களானவை (ஓருபால்), Oru Paal - மற்றோரிடத்தில் கண்காட்ட, Kan Kaata - (அந்த மாதர்களின்) கண்கள் போன்று அலரப் பெற்றதும் (ஒருபால்), Oru Paal - மற்றோரிடத்தில் நனிசேர் கமலம், Nani Seer Kamalam - மிகுதியாகவுள்ள தாமரைப் பூக்களானவை முகம் காட்டும், Mukam Kaatum - (அந்த மாதர்களின்) முகம் போன்று விகஸிக்கப் பெற்றதுமான |