திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1512 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புருஷ புத்தயா அதீனம் ஆகையாலே நிர்த் தோஷமாய் இருக்கிற ஸ்ருதிகளை பத நியமங்களோடே அதிகரித்து – கேவல அத்யயனம் பண்ணுகை அன்றிக்கே அதனுடைய அனுஷ்டானம் அளவும் போருமவர்கள் அது தான் காதாசித்கமாய் இருக்கை அன்றிக்கே அது தான் யாத்ரையாய் இருக்குமவர்கள் – அது தன்னை ஒரு பலத்துக்காக அனுஷ்டிக்கை அன்றிக்கே அநந்ய பிரயோஜனராய் அனுஷ்டிக்கும்படியான வை லஷண்யத்தை உடையவர்கள் –வாழும் நறையூர் நின்ற நம்பியே) 5 | வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்ல்டர்த்துக்
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே –6-7-5 | பதவுரை Show / Hideவில் ஆர் விழவில், Vil Ar Vilavil - (கம்ஸன் நடத்தின ததுர்யாகத்திலே) (- (நறையூர், நின்ற நம்பி-.)) வட மதுரை விரும்பி, Vata Maturai Virumbi - வடமதுரைக் கெழுந்தருள ஆசைப்பட்டு (எழுந்தருளின வளவிலே) விரும்பா, Virumba - எதிரிகளான மல், Mal - மல்லர்களை அடர்த்து, Adarthu - முடித்து (அதன் பிறகு) கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான், Kal Ar Thiral Thol Kanjanai Kaindhaan - மலை போன்று திரண்ட தோள்களை யுடையனான கம்ஸனைச் சீறிக் கொன்றவனும் காளியன் மேல், Kaaliyan Mel - காளிய நாகத்தின் மீது பாய்ந்தான், Paindhaan - குதித்து அதனை வலியத்தின் வலுமான பெருமான், சொல் ஆர் சுருதி, Sol Ar Suruthi - (குற்றமற்ற) சொற்கள் நிரம்பீய வேதங்களை முறை ஓதி, Murai Othi - முறைப்படியே அதிகரித்து சோமு செய்யும் தொழிலினோர், Somu Seyyum Thozhilinor - ஸோமயாகம் முதலியயாகங்களை நடத்துவதைக் கருமமாக வுடையராய் நல்லார், Nallaar - விலக்ஷணரான மறையோர் பலர் வாழும், Maraiyor Palar Vaalum - வைதிகர்கள் பலர்வாழுமிடமான |