திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1515 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1515பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரக் கழலை உடைய ராஜாக்கள் முழுக்காயாக அவியும்படி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தான் ஆய்த்து) 8
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8
பதவுரை Show / Hide
பந்து ஆர் விரலாள், Pandhu Aar Viralal - பந்து பிடித்து விளையாடும் விரலையுடையளான (- (நறையூர். நின்ற நம்பி-.))
பாஞ்சாலி, Panchali - த்ரௌபதியானவள்
கூந்தல் முடிக்க, Koondhal Mudikka - குழல் முடித்துக் கொள்வதற்காக,
பாரதத்து, Bharathaththu - பாரதப்போரில்
கந்து ஆர் களிறு, Kandhu Aar Kaliru - (மதஜலத்தின்) மணம் பொருந்திய யானைகளின் மேலேறியிருப்பவர்களும்
கழல், Kazhal - வீரக்கழலை யணிந்தவருமான
மன்னர், Mannar - அரசர்கள் (துரியோதனாதியர்)
கலங்க, Kalanga - மதிகலங்குமாறு
சங்கம், Sangam - தனது  ஸ்ரீபாஞ்சஜன்யத்தை
வாய் வைத்தான், Vaai Vaiththaan - திருப்பவளத்தில் வைத்து ஊதின பெருமான்,-
செம் தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய, Sem Thaamarai Mel Ayanodu Sivanum Anaiya - கமலாஸநனான பெருமானோடும் ருத்ரனோடும் ஒத்த
பெருமையோர், Perumaiyor - பெருமைவாய்ந்தவர்களும்
நந்தா வண் கை, Nandha Van Kai - ஒரு காலும் குறைபடாத ஔதார்யத்தை யுடையவர்களுமான
மறையோர், Maraiyor - பிராமணர்கள்
வாழ், Vaazh - வாழப்பெற்ற