திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1515 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரக் கழலை உடைய ராஜாக்கள் முழுக்காயாக அவியும்படி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தான் ஆய்த்து) 8 | பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8 | பதவுரை Show / Hideபந்து ஆர் விரலாள், Pandhu Aar Viralal - பந்து பிடித்து விளையாடும் விரலையுடையளான (- (நறையூர். நின்ற நம்பி-.)) பாஞ்சாலி, Panchali - த்ரௌபதியானவள் கூந்தல் முடிக்க, Koondhal Mudikka - குழல் முடித்துக் கொள்வதற்காக, பாரதத்து, Bharathaththu - பாரதப்போரில் கந்து ஆர் களிறு, Kandhu Aar Kaliru - (மதஜலத்தின்) மணம் பொருந்திய யானைகளின் மேலேறியிருப்பவர்களும் கழல், Kazhal - வீரக்கழலை யணிந்தவருமான மன்னர், Mannar - அரசர்கள் (துரியோதனாதியர்) கலங்க, Kalanga - மதிகலங்குமாறு சங்கம், Sangam - தனது ஸ்ரீபாஞ்சஜன்யத்தை வாய் வைத்தான், Vaai Vaiththaan - திருப்பவளத்தில் வைத்து ஊதின பெருமான்,- செம் தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய, Sem Thaamarai Mel Ayanodu Sivanum Anaiya - கமலாஸநனான பெருமானோடும் ருத்ரனோடும் ஒத்த பெருமையோர், Perumaiyor - பெருமைவாய்ந்தவர்களும் நந்தா வண் கை, Nandha Van Kai - ஒரு காலும் குறைபடாத ஔதார்யத்தை யுடையவர்களுமான மறையோர், Maraiyor - பிராமணர்கள் வாழ், Vaazh - வாழப்பெற்ற |