திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1518 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான திரு மலையிலே வந்து நிற்கிறவனை – தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க வேண்டாத படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து- அவன் நாடித் திரிகிற போது வைமுக்க்யம் பண்ணி இறாய்த்து திரிந்த நான் ஸ்ரீ நறையூரில் –அறுகாத பயணம் போய் ஸ்ரீ பரம பதத்தில் காண்கை அன்றிக்கே விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் – என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1 | பதவுரை Show / Hideமான் கொண்ட தோல் மார்வில் மாணி ஆய், Maan Konda Thol Maarvil Maani Aay - கிருஷ்ணாஜினத்தை மார்பிலே தரித்த பிரமசாரியாகி மாவலி, Mavali - மஹாபலி பக்கலில் மண்தான் கொண்டு, Manthaan Kondo - பூமியைத் தான் யாசித்துப்பெற்று தாளால் அளந்த, Thaalal Alandha - திருவடிகளாலே ஆக்ரமித்துக் கொண்ட பெருமானை, Perumaanai - பெருமை பொருந்தியவனும் தேன்கொண்ட சாரல், Then Konda Saaral - தேனையுடைத்தான தாழ்வரைகளையுடைய திருவேங்கடத்தானை, Thiruveengadathaanai - திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானை நான் நாடி சென்று நறையூரில் கண்டேன், Naan Naadi Senru Naraiyooril Kandein - தேடிக் கொண்டுபோய் திருநறையூரில் ஸேவிக்கப் பெற்றேன். |