திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1519 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்களுக்கு கடல் கடைந்தாப் போலேயும் ஜகத்துக்கு பிரளயத்தைப் பரிகரித்தால் போலேயும் என்னுடைய சம்சார பிரளயத்தை பரிகரிக்கைகாக ஸ்ரீ பிராட்டி யோடும் கூட ஸ்ரீ திரு வாலியிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை தேவர்களோடு லௌகிகரொடு என்னோடு வாசி அற அபேஷிதம் செய்யும்படி யான ஸ்ரீ சர்வேஸ்வரனை –பிராப்தி உடையவனை) 2 | முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே –6-8-2 | பதவுரை Show / Hideமுன்நாள், Munnal - முன்பொருகாலத்தில் (- (நறையூரில், கண்டேன்-.)) முந்நீரை, Munneerai - ஸமுத்ரத்தை கடைந்தானை, Kadaindhaanai - கடைந்தவனும் மூழ்ந்த நாள், Moozhndha Naal - (உலகத்தைப்) பிரளயங்கொண்ட காலத்தில் மீன் ஆய், Meen Aay - மத்ஸ்ரூபியாகி அந்நீரை, Annneerai - அந்தப் பிரளயக்கடல் நீரை அமைத்த, Amaiththa - அடக்கின பெருமானை, Perumaanai - பெருமை பொருந்தியவனும் தென் ஆலி, Then Aali - அழகிய திருவாலிமா நகரில் மேய, Meya - நி்த்யவாஸம் பண்ணுநின்ற திருமாலை, Thirumalai - திருமகள் நாதனுமான எம்மானை, Emmaanai - எம்பெருமானை நல் நீர் வயல் சூழ், Nal Neer Vayal Soozh - நல்ல நீர்பாயும் கழனிகளாற் சூழப்பட்ட |