Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 152 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
152பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 1
வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 -4-1
வெண்ணெய் அளைந்த, Vennai alaindha - வெண்ணெ யளைந்ததனாலான
குணுங்கும், Kunungum - மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும், Vilaiyaadu puzhudhiyum - விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு, Kondu - (உடம்பிற்) கொண்டிருந்து (அதனால்)
இவ் விரா, Iv vira - இன்றை இரவில்
தேய்த்து கிடக்க, Theithu kidakka - (உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)
உன்னை, Unnai - உன்னை
திண்ணென, Thinnaena - நிச்சயமாக
நான் ஒட்டேன், Naan ottaen - நான் ஸம்மதிக்க மாட்டேன்
எண்ணெய், Ennai - (தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும்
புளி பழம், Puli pazham - புளிப் பழத்தையும்
கொண்டு, Kondu - ஸித்தமாக வைத்துக் கொண்டு
இங்கு, Ingu - இங்கே
எத்தனை போதும், Ethanai podhum - எவ்வளவு காலமாக (வெகு காலமாக)
இருந்தேன், Irundhaen - (உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன்
நண்ணல் அரிய பிரானே, Nannal ariya pirane - (ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே
நாரணா, Naaraana - நாராயணனே
நீராட, Neeraada - நீராடுவதற்கு
வாராய், Vaaraay - வர வேணும்