| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 152 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 1 | வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 -4-1 | வெண்ணெய் அளைந்த, Vennai alaindha - வெண்ணெ யளைந்ததனாலான குணுங்கும், Kunungum - மொச்சை நாற்றத்தையும் விளையாடு புழுதியும், Vilaiyaadu puzhudhiyum - விளையாடுவதினாற் படிந்த புழுதியையும் கொண்டு, Kondu - (உடம்பிற்) கொண்டிருந்து (அதனால்) இவ் விரா, Iv vira - இன்றை இரவில் தேய்த்து கிடக்க, Theithu kidakka - (உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட) உன்னை, Unnai - உன்னை திண்ணென, Thinnaena - நிச்சயமாக நான் ஒட்டேன், Naan ottaen - நான் ஸம்மதிக்க மாட்டேன் எண்ணெய், Ennai - (தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும் புளி பழம், Puli pazham - புளிப் பழத்தையும் கொண்டு, Kondu - ஸித்தமாக வைத்துக் கொண்டு இங்கு, Ingu - இங்கே எத்தனை போதும், Ethanai podhum - எவ்வளவு காலமாக (வெகு காலமாக) இருந்தேன், Irundhaen - (உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன் நண்ணல் அரிய பிரானே, Nannal ariya pirane - (ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே நாரணா, Naaraana - நாராயணனே நீராட, Neeraada - நீராடுவதற்கு வாராய், Vaaraay - வர வேணும் |