திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1520 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படி பண்ணினான் ஆய்த்து – ராஜ புத்ரர்களைப் பிணைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலும் சோறும் இடக் கடவது காண் -என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ பட்டர்- ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க என்னுடைய ரஷணத்துக்காக ஸ்ரீ திரு நாவாயிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை- அந்த ஸ்ரீ திரு நாவாய் தான் பரம பதத்தோபாதியாம் படி அடுத்து அணித்தாக ஸ்ரீ திரு நறையூரிலே-காணப் பெற்றேன்) 3 | தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில் கண்டேனே –6-8-3 | பதவுரை Show / Hideதூ வாய புள் ஊர்ந்து, Thoo Vaai Pul Oondru - பரிசுத்தமான வாயையுடைய பெரிய திருவடியை வாஹனமாகக்கொண்டு (- (நறையூரில், கண்டேன்-.)) துறை வந்து, Thurai Vandu - வந்து சேர்ந்து வேழம் மூவாமை நல்கி, Vezham Moovaamai Nalki - ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பமடையாதபடி அருள்புரிந்து முதலை துணித்தானை, Muthalai Thuniththaanai - முதலையை இரு துண்டமாக்கி யொழித்தவனும் தேவாதி தேவனை, Devaadhi Devanai - நித்யஸூரிகளுக்குத் தலைவனும் செம் கமலம் கண்ணானை, Sem Kamalam Kannaanaai - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையனும் நாவாய் உளானை, Naavai Ulaanai - திருநாவாயென்னும் திருப்பதியிலிருப்பவனுமான எம்பெருமானை |