திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1520 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1520பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படி பண்ணினான் ஆய்த்து – ராஜ புத்ரர்களைப் பிணைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலும் சோறும் இடக் கடவது காண் -என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ பட்டர்- ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க என்னுடைய ரஷணத்துக்காக ஸ்ரீ திரு நாவாயிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை- அந்த ஸ்ரீ திரு நாவாய் தான் பரம பதத்தோபாதியாம் படி அடுத்து அணித்தாக ஸ்ரீ திரு நறையூரிலே-காணப் பெற்றேன்) 3
தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானைத் தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை நாவாயுளானை நறையூரில் கண்டேனே –6-8-3
பதவுரை Show / Hide
தூ வாய புள் ஊர்ந்து, Thoo Vaai Pul Oondru - பரிசுத்தமான வாயையுடைய பெரிய திருவடியை வாஹனமாகக்கொண்டு (- (நறையூரில், கண்டேன்-.))
துறை வந்து, Thurai Vandu - வந்து சேர்ந்து
வேழம் மூவாமை நல்கி, Vezham Moovaamai Nalki - ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பமடையாதபடி அருள்புரிந்து
முதலை துணித்தானை, Muthalai Thuniththaanai - முதலையை இரு துண்டமாக்கி யொழித்தவனும்
தேவாதி தேவனை, Devaadhi Devanai - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
செம் கமலம் கண்ணானை, Sem Kamalam Kannaanaai - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையனும்
நாவாய் உளானை, Naavai Ulaanai - திருநாவாயென்னும் திருப்பதியிலிருப்பவனுமான எம்பெருமானை