திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1522 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வருகிற ஸ்ரீ விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று ஸ்ரீ மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கை கொள்ளுகை தவிரோம் – என்று ஸ்ரீ பெருமாளும் நிர்பந்திக்க ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி ஸ்ரீ நறையூரிலே காணப் பெற்றேன்) 5 | கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5 | பதவுரை Show / Hideகல் ஆர் மதிள் சூழ் கடி, Kal Aar Mathil Soozh Kadi - கற்களால் கட்டப்பட்ட மதிள்களால் சூழப்பட்ட (- (நாடி, நறையூரில் கண்டேன்-.)) இலங்கை கார் அரக்கன், Ilankai Kaar Arakkan - அருணுடைத்தான லங்காபுரியிலுள்ள நீசனான ராக்ஷஸராஜனுடைய வல் ஆகம் கீள, Val Aagam Keela - மிடுக்குடைய சரீரம் தொலையும்படி வரி வெம் சரம் துரந்த, Vari Vem Saram Thurandha - அழகிய வெவ்விய அம்புகளைப் பிரயோகித்த வில்லானை, Villaanai - சார்ங்கத்தை யுடையவனும் செல்வம் விபீடணற்கு, Selvam Vibeedanarku - ஸ்ரீமானான விபீஷணாழ்வானுக்கு வேறுஆக, Veeraga - விலக்ஷணமாக நல்லானை, Nallaanai - அன்பனுமான எம்பெருமானை |