திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1523 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை அணுகினவருக்கு தன் கையிலே சமர்ப்பிக்கலாம் படி விச்வச நீயன் ஆனவன் -– சம்சாரத்தில் இருக்கச் செய்தே அவனை விச்வசித்து பற்றப் பெற்றேன்) 6 | உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6 | பதவுரை Show / Hideஉம்பர் உலகோடு உயிர் எல்லாம், Umbra Ulagodu Uyir Ellam - தேவலோகத்தோடு கூட (மற்றுமுள்ள மநுஷ்யாதி பிராணிகளையும் (- (நாடி, நறையூரில் கண்டேன்-.)) உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை, Undhiyil Vambu Malarmel Padaithaanai - (தனது) திருநாபியிலுள்ள பரிமளம்மிக்க தாமரைப் பூவிலே ஸ்ருஷ்டித்தவனும் மாயோனை, Maayoni - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனும் அம்பு அன்ன கண்ணாள், Ambu Anna Kannaal - அம்புபோன்ற கண்களை யுடையவளான அசோதை தன், Asothai Than - யசோதைப்பிராட்டியின் சிங்கத்தை, Singaththai - சிங்கக்குட்டி போன்ற பிள்ளையும் நம்பனை, Nambanai - ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனுமான எம்பெருமானை |