திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1526 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகிய திருத் தோள்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் – ஸ்ரீ ஆழ்வார்களை ஒழியவே வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி யாய்த்து திருத் தோள்கள் அழகு இருக்கும் படி – ஆபரணத்துக்கும் ஆபரணம் போலே –ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்குமா போலே நமக்கு ஸ்வாமி ஆனவனை-நமக்காக வந்து நிற்கிற ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன்) 9 | பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கை பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-9 | பதவுரை Show / Hideபொங்கு ஏறு, Pongu Aeru - மேன்மேலும் அதிசயித்து வருகிற (- (நாடி, நறையூரில் கண்டேன்-.)) நீள் சோதி, Neel Sothi - அளவற்ற தேஜஸ்ஸையுடைய பொன் ஆழி தன்னோடும், Pon Aazhi Thannodum - அழகிய திருவாழி யாழ்வானும் சங்கு ஏறு கோலம் தட, Sangu Aeru Kolam Thada - ஸ்ரீ பாஞ்சஜந்யாழ்வானும் குடிகொண்டிருக்கப்பெற்ற அழகிய கை, Kai - திருக்கைகளையுடைய பெருமானை, Perumaanai - பெருமை பொருந்தியவனும் கொங்குஏறு சோலை, Konguearu Solai - தேன் மிகுந்திருக்கிற பொழில்களையுடைய குடந்தை, Kudanthai - திருக்குடந்தையில் கிடந்தானை, Kidandhanai - பள்ளிகொண்டிருப்பவனுமான நம் கோனை, Nam Konai - நம்பெருமானை |