Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 153 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
153பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 2
கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2
நின்ற, Nindra - நிலையாய் நின்ற
மராமரம், Maramaram - (ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே
கன்றுகள், Kanrugal - பசுவின் கன்றுகள்
ஓட, Oda - வெருண்டோடும்படி
செவியில், Seviyil - (அக் கன்றுகளின்) காதில்
கட்டெறும்பு பிடித்து இட்டால், Katterumbu pidithu ittaal - கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால்
தென்றி, Thenri - (அதனால் அக் கன்றுகள் வெருண்டு)சிதறிப் போய்
கெடும் ஆகில், Kedum aagil - (கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால் (பின்பு நீ)
வெண்ணெய், Vennai - வெண்ணையை
திரட்டி, Thiratti - திரட்டி
விழுங்குமா, Vizhungumaa - விழுங்கும்படியை
காண்பன், Kaanban - பார்ப்பேன்(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி)
இன்று, Indru - இந்த நாள்
நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த
திரு ஓணம், Thiru onam - ஸ்ரவண நஷத்ரமாகும் (ஆகையால்)
நீ, Nee - நீ
நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராடுவதற்கு வர வேணும்
எம்பிரான் ஓடாதே வாராய், Embiraan odaathe vaaraay - எம்பிரான் ஓடாதே வாராய்