| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 153 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 2 | கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 | நின்ற, Nindra - நிலையாய் நின்ற மராமரம், Maramaram - (ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே கன்றுகள், Kanrugal - பசுவின் கன்றுகள் ஓட, Oda - வெருண்டோடும்படி செவியில், Seviyil - (அக் கன்றுகளின்) காதில் கட்டெறும்பு பிடித்து இட்டால், Katterumbu pidithu ittaal - கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால் தென்றி, Thenri - (அதனால் அக் கன்றுகள் வெருண்டு)சிதறிப் போய் கெடும் ஆகில், Kedum aagil - (கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால் (பின்பு நீ) வெண்ணெய், Vennai - வெண்ணையை திரட்டி, Thiratti - திரட்டி விழுங்குமா, Vizhungumaa - விழுங்கும்படியை காண்பன், Kaanban - பார்ப்பேன்(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி) இன்று, Indru - இந்த நாள் நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த திரு ஓணம், Thiru onam - ஸ்ரவண நஷத்ரமாகும் (ஆகையால்) நீ, Nee - நீ நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராடுவதற்கு வர வேணும் எம்பிரான் ஓடாதே வாராய், Embiraan odaathe vaaraay - எம்பிரான் ஓடாதே வாராய் |