திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1531 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மன்றில் பரப்படைய பாழ் தீரும்படி குடக் கூத்தாடி- இந்த்ரன் வர்ஷிப்பிக்க மலையை எடுத்து வர்ஷத்தை பரிக்ரஹித்த -மலையாலே மலையை எடுத்தால் போலே திரண்ட தோளை உடையவன்) 4 | துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே –6-9-4 | பதவுரை Show / Hideதுன்று, Thunru - நெருங்கியும் (- (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை-.)) ஒளி, Oli - ஒழுங்குபெற்று மிருக்கிற துகில் படலம், Thugil Patalam - த்வஜபடங்களின் திரள்கள் மாளிகை மேல், Maaligai Mel - மாளிகைகளின் மேல் எங்கும் துன்னி, Engum Thunni - எல்லாவிடங்களிலும் நிபிடமாய் ஆர நின்று, Aara Nindru - பரம்பியிருந்து வான் மூடும், Vaan Moodum - ஆகாசத்தை மறையா நின்றதாய் நீள் செல்வம, Neel Selvam - நிறைந்த செல்வத்தை யுடையதான மன்று ஆர, Manru Aara - வெளிநிலமெங்கும் குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும் வரை எடுத்து, Varai Eduthu - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி மழை தடுத்த, Mazhai Thadutta - மழையைத் தடைசெய்தவனும் குன்று ஆரும் திரள் தோளன், Kundru Aarum Thiral Tholan - மலைபோன்று திரண்ட திருத்தோள்களையுடையனுமான பெருமானுடைய குரை கழலே, Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே |