திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1532 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1532பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகங்கள் ஏழையும் வயிற்றிலே வைத்து பிரளயம் தேடி வந்தால் இங்கு உண்டோ என்று பண்டையிலும் இளைத்துக் காட்டும் திரு வயிற்றை உடையவன் –தன்னைப் பற்றினாரை உள்ளே இட்டு தன்னை பிரளயத்துக்கு இலக்காக்கி நோக்குமவன் திருவடிகளிலே அடையப் பார்) 5
அகில் குறடும் சந்தனமும் பொன்னு மணி முத்தும் மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர் பகல் கரந்த சுடராழிப் படையான் இவ் உலகு எழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே –6-9-5
பதவுரை Show / Hide
அகில் குறடும், Akil Kuradum - அகில் கட்டைகளையும் (- (திரு நறையூர்-;) (நெஞ்சே! அடை-.))
சந்தனமும், Sandhanamum - சந்தனக் கட்டைகளையும்
அம் பொன்னும், Am Ponnum - அழகிய பொன்களையும்
அணி முத்தும், Ani Muthum - அழகிய முத்துக்களையும்
திரை, Thirai - அலைகளானவை
மிக கொணர்ந்து, Miga Konrandhu - மிகுதியாகத் திரட்டிக் கொண்டு வந்து
உந்தும், Undum - தள்ளுகிற
வியன் பொன்னி, Viyan Ponni - ஆச்சரியமான பொன்னி யாற்றையுடைய
பகல் கரந்த, Pakal Karandha - (பாரதப்போரில்) ஸூரியனை மறைத்த
சுடர் ஆழி, Sudar Aazhi - உஜ்வலமான சக்கரத்தை
படையான், Padaiyaan - ஆயுதமாகவுடையனும்
இ உலகு ஏழும், I Ulagu Ezhum - இவ்வுலகங்களெல்லாவற்றையும்
புக கரந்த, Puga Karandha - உள்புகச்செய்து மறைத்து வைத்த
திரு வயிற்றின், Thiru Vayittrin - திருவயிற்றை யுடையவனுமான பெருமானுடைய
பொன் அடியே, Pon Adiye - அழகிய திருவடிகளையே