திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1535 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலை போலே தர்ச நீயமான திரு மணி மாடக் கோயிலின் உள்ள அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நிலையார நின்றான் ஆய்த்து- நிற்கிற போதை அழகைக் கண்டு-இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும் – மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய் அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய ஸ்ரீ திருநறையூரில் மன்னி நிலையார நின்றான்) 8 | குலையார்ந்த பழுக் காயும் பசும் காயும் பாளை முத்தும்
தலையார்ந்த விளங்கனியின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8 | பதவுரை Show / Hideகுலை ஆர்த்த பழுக்காயும், Kulai Aartha Pazhukkaiyum - குலைகுலையாக நிறைந்து படுத்த காய்களும் (- (தட சோலை திரு நறையூர் -!) (நெஞ்சே! அடை-.)) பசுங்காயும், Pasungaiyum - பழுக்கப்போகிற காய்களும் பாளை முத்தும், Paalai Muththum - பாளைகளிலுண்டான முத்துக்களும் தலை ஆர்ந்த, Thalai Aarntha - தலைகளிலே நிறைந்திருக்கப்பெற்ற இள கமுகின், Ila Kamugin - இளைய பாக்குமரங்களையுடைய மலை ஆர்த்த கோலம் சேர், Malai Aartha Kolam Ser - மலைபோன்று அழகு பொருந்திய மணி மாடம், Mani Maadam - மணிமாடக்கோயிலில் மிக மன்னி, Miga Manni - மிகவும் பொருந்தி நிலை ஆர நின்றான் தன், Nilai Aara Nindraan Than - ஸ்திரமாக நிற்கும் பெருமானுடைய நீள் கழலே, Neel Kazhale - நீண்ட திருவடிகளையே |