திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1537 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாடல் பத்தும் வல்லார் –போக பூமிகளில் பிரதானமான ஸ்ரீ பரம பதத்திலே போய் ஸ்ரீ நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10 | திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10 | பதவுரை Show / Hideதிண் களகம் மதிள் புடைசூழ், Thin Kalagam Mathil Pudaisool - திடமாய் (சுண்ணாம்புச்) சாந்து இடப்பெற்றதான திருமதிளாலே நாற்புறமும் சூழப்பட்ட திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில் நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்குமெம்பெருமான் விஷயமாக வண் களகம், Van Kalagam - அழகிய அன்னப்பறவைகள் நிலவு எறிக்கும், Nilavu Erikkum - நிலாப்போல் விளங்கப்பெற்ற வயல், Vayal - கழனிகளையுடைத்தான மங்கை நகராளன், Mangai Nagaralan - திருமங்கை நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார் பண்கள் அகம் பயின்ற, Pankal Agam Payindra - பண்களுக்குள்ளே ஸாரமான பண்ணிலே அருளிச்செய்த சீர், Seer - சீர்மை பொருந்திய பாடல் இவை பத்தும், Paadal Ivai Paththum - இப்பாசுரங்கள் பத்தையும் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் விண்கள் அகத்து, Vingkal Akaththu - மேலுலகங்களுள் முக்கியமான பரமபதத்தில் இமையவர்ஆய், Imaiyavar Aayi - நித்யஸூரிகளோடு ஒரு கோஷ்டியாய் வீற்றிருந்து, Veetrirundhu - பெருமைபெறவிருந்து வாழ்வார், Vaalvaar - வாழப்பெறுவர். |