திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1538 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1538பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் இட்ட அரண் அழியும்படியாக குரூரமான ராஷசர் திரண்ட இலங்கையை அழியச் செய்து அத்தால் வந்த வீர ஸ்ரீ யால் குறைவற்றவன் – பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த அத்புத கர்மத்தால் குறைவற்றவன் – கண் வளர்ந்து அருளுகிற போதை அழகாலே பூரணன் ஆனவன் –- சம்சாரிகளாய் குறைவே நிரூபகமாம் படி இருக்கிற நம்முடைய குறைவு தீர்க்கைக்கு அடியான பௌஷ்கல்யத்தை உடையைவன் – அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே) 1
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக் கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1
பதவுரை Show / Hide
குடந்தை மேவி கிடந்த நம்பி, Kudandhai Mevi Kidandha Nambi - திருக்குடந்தையிலே பொருந்திப் பள்ளிகொண்டிருக்கின்ற ஸ்வாமியாயும்
கேழல் ஆய் உலகை இடந்த நம்பி, Kezhal Aayi Ulagai Idantha Nambi - வராஹரூபியாகி பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த ஸ்வாமியாயும்
எங்கள் நம்பி, Engal Nambi - எங்களுடைய குறைகளைத் தீர்க்க வல்லவனாயும்
எறிஞர் அரண் அழிய, Erinjir Aran Azhiya - சத்துருக்களினுடைய கோட்டை அழியும்படியாக
கடியார் இலங்கை கடந்த நம்பி, Kadiyaar Ilangai Kadandha Nambi - கடூரமானதன்மையுடைய அரக்கர் வாழும் இலங்கையை நாசஞ்செய்த ஸ்வாமியாயும்
உலகை ஈர் அடியால் நடந்த நம்பி, Ulagai Eer Adiyaal Nadandha Nambi - லோகங்களை இரண்டடியாலே அளந்துகொண்ட ஸ்வாமியாயுமிருக்கிற ஸர்வேச்வரனுடைய
நாமம், Naamam - திருநாமத்தை
சொல்லில், Sollil - சொல்லப்பார்க்கில்
நமோ நாராயணமே, Namo Narayaname - (அது) பெரிய திருமந்திர மாகும்.