திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1539 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1539பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பிரளயங்கதை யான பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான் லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம்) 2
விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன் தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன் இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2
பதவுரை Show / Hide
முனநாள், Munanhaal - முனபொருகால், (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.))
விடம் உடைய அரவம் தான், Vidam Udaya Aravam Thaan - விஷத்தையுடைத்தான காளியநாகமானது
வெருவ, Veruva - அஞ்சும்படியாக
முன், Mun - இடைப்பிள்ளைகளின் முன்னே
தட தாமரை பொய்கை நீர் புக்கு, Tada Thamarai Poigai Neer Pukku - பெரிய தாமரைகளையுடைய (யமுனையின் ஒருமடுவின்) நீரில் புகுந்து
செருவில், Seruvil - (அந்த நாகத்தோடு போர் செய்ததில்
மிக்க, Mikka - மேன்மைபெற்ற
தாளாளன், Thaalalan - திருவடிகளை யுடையவனும்
கேழல் ஆகி, Kezhal Aagi - வராஹமூர்த்தியாகி
வையம், Vaiyam - பூமியை
இடந்தான், Idandhaan - குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும்
ஈர் அடியால், Eer Adiyaal - இரண்டடியாலே
உலகை, Ulagai - உலகங்களை
நடந்தானுடைய, Nadandhaanudaiya - அளந்துகொண்டவனுமான எம்பெருமானுடைய