Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 154 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
154பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - ‘உனக்கு முலை கொடுத்த பேய்ச்சி பட்ட பாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபட வேண்டி வரப் போகிறதே என்று அஞ்சி ஓட வேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல் உனக்கு நான் முலை தந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள். நெல்லி – நெல்லியிலை. காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது. கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித் தாது வடியாப் பிறந்த வினையெச்சம். 3
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3
பேய்ச்சி, Peycchi - பூதனையினுடைய
முலை, Mulai - முலையை (அவளுடைய உயிரோடும்)
உண்ண, Unna - (நீ) உண்டு விட
கண்டு, Kandu - (அதைப்) பார்த்தும்
பின்னையும் என் நெஞ்சம் நில்லாது, Pinnaiyum en nenjam nillaadhu - (நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க
ஆய்ச்சியர் எல்லாரும், Aaychiyar ellaarum - இடைச்சிகள் எல்லாரும்
கூடி, Koodi - ஒன்று கூடி
அழைக்கவும், Azhaikkavum - கூப்பாடு போட்டுக் கதறவும்
நான், Naan - (உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலை தந்தேன், Mulai thandhaen - முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு, Nelliyodu - நெல்லியை யிட்டு
காய்ச்சின, Kaaychina - காய்ச்சின
நீர், Neer - வெந்நீரை
கடாரத்தில், Kadaarathil - சருவத்தில்
பூரித்து வைத்தேன், Poorithu vaithaen - நிறைத்து வைத்திருக்கிறேன்
வாய்த்த, Vaaytha - பொருந்திய
புகழ், Pugazh - யசஸ்ஸையும்
மணி, Mani - நீல மணி போன்ற
வண்ணா, Vanna - நிறத்தையுமுடைய கண்ணனே!
மஞ்சனம் ஆட, Manjanam aada - நீராட
நீ வாராய், Nee vaaraay - நீ வர வேணும்