| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 154 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 3 | பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன் வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3 | பேய்ச்சி, Peycchi - பூதனையினுடைய முலை, Mulai - முலையை (அவளுடைய உயிரோடும்) உண்ண, Unna - (நீ) உண்டு விட கண்டு, Kandu - (அதைப்) பார்த்தும் பின்னையும் என் நெஞ்சம் நில்லாது, Pinnaiyum en nenjam nillaadhu - (நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க ஆய்ச்சியர் எல்லாரும், Aaychiyar ellaarum - இடைச்சிகள் எல்லாரும் கூடி, Koodi - ஒன்று கூடி அழைக்கவும், Azhaikkavum - கூப்பாடு போட்டுக் கதறவும் நான், Naan - (உன் மேல் அன்பு கொண்ட) நான் முலை தந்தேன், Mulai thandhaen - முலை (உண்ணக்) கொடுத்தேன் நெல்லியொடு, Nelliyodu - நெல்லியை யிட்டு காய்ச்சின, Kaaychina - காய்ச்சின நீர், Neer - வெந்நீரை கடாரத்தில், Kadaarathil - சருவத்தில் பூரித்து வைத்தேன், Poorithu vaithaen - நிறைத்து வைத்திருக்கிறேன் வாய்த்த, Vaaytha - பொருந்திய புகழ், Pugazh - யசஸ்ஸையும் மணி, Mani - நீல மணி போன்ற வண்ணா, Vanna - நிறத்தையுமுடைய கண்ணனே! மஞ்சனம் ஆட, Manjanam aada - நீராட நீ வாராய், Nee vaaraay - நீ வர வேணும் |