திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1543 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1543பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன் – இனி இது கண்டால் எல்லார்க்கும் சொலத் தட்டில்லை இறே என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள் – நமோ நாராயணமே –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள- ஸ்ரீ ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை – உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் – தேவோ நாம சஹஸ்ரவான் –-பல பசு உடையவன் -என்னுமா போலே ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து-இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது – அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு-காரண வாக்யங்களோடு– இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே – இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும்) 6
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6
பதவுரை Show / Hide
கானம் எண்கும், Kaanam Enkum - காட்டுக்கரடிகளையும்
குரங்கும், Kurangum - குரங்குகளையும்
முசுவும், Musuvum - ‘முசு’ என்னுஞ்சாதிக் குரங்குகளையும்
படை ஆ, Padai Aa - சேனையாகக்கொண்டு
அடல் அரக்கர், Adal Arakkar - கொடிய ராக்ஷருடைய
மானம், Maanam - செருக்கு
அழித்துநின்ற, Azhiththinira - அழியச்செய்த
வென்றி அம்மான், Vendri Amman - ஜயசீலனான ஸ்வாமியுமான
திருமால், Thirumaal - திருமாலினுடைய.-
எனக்கு, Enakku - எனக்கு
என்றும், Endrum - எப்போதும்
தேனும் பாலும் அமுதும் ஆய, Thenum Paalum Amuthum Aaya - பரமபோக்யமாயிருக்கின்ற
திருநாமம் நமோநாராயணம், Thirunamam Namonaarayanam - திருநாமமாகிய பெரிய திருமந்திரத்தை
நானும் சொன்னேன், Naanum Sonnaen - நானும் உச்சரித்தேன்;
நமரும் உரைமின், Namrum Uraimin - நம்மைச்சேர்ந்தவர்களும் சொல்லுங்கோள்.