திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1544 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1544பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காரண பூதனனவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில் இனியது தான் வேணுமே – பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும் சொன்னேன்-இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை – நமோ நாராயணமே —சஹஸ்ர அஷரீ மாலா-மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல) 7
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7
பதவுரை Show / Hide
நின்றவரையும், Nindravaraiyum - ஸ்திரமாக நிற்கின்ற மலைகளும் (- (ஆகிய இவையெல்லாம்) (திருநாமம் நமோநாராயணம்-;) (நன்று சொன்னேன் காண்மின்.))
கிடந்த கடலும், Kidandha Kadalum - வற்றாதேயிருக்கின்ற ஸமுத்ரமும்
திசையும், Thisaiyum - திக்குக்களும்
இரு நிலனம், Iru Nilanam - பரந்த பூமியும்
ஒன்றும் ஒழியா வண்ணம், Onrum Ozhiyavannam - சிறிதும் பாழாகாதபடி
எண்ணி நின்ற, Enni Nindra - ஸங்கல்பத்தாலே ப்ரவாஹ நித்யமாக்கிக்கொண்டேவருகிற
அம்மானார், Ammanar - ஸ்வாமியும்
குன்று, Kundru - கோவர்த்தனமலையை
குடை ஆ எடுத்த அடிகளுடைய, Kudai A Edutha Adigaludaiya - குடையாயவேந்தின ஸ்வாமியுமானவனுடைய
தொண்டீர், Thondir - ஓ பக்தர்களே!