திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1547 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1547பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது – இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் – த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை) 10
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக் காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10
பதவுரை Show / Hide
வாவி தடம் சூழ், Vaavi Thadam Sool - நடைவாவிகளாலும் தடாகங்களாலும் சூழப்பட்டதும்
மணிமுத்தாறு, Manimuthaaru - மணிமுத்தாற்றை யுடையதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரி லெழுந்தருளியிருக்கிற
நெடுமாலை, Nedumalaik - ஸர்வேச்வரனை
நாவின் பரவி, Naavin Paravi - நாவினால் துதித்தும்
நெஞ்சில் கொண்டு, Nenjil Kondu - நெஞ்சில் சிந்தித்தும்
நம்பி நாமத்தை, Nambi Naamathai - அந்தத் திருநறையூர் நம்பியின் திருநாமம் விஷயமாக
காவி தட கண் மடவார்கேள்வன், Kaavi Thada Kan Madavaarkelvan - கருநெய்தற் பூப்போன்று பரந்த கண்களையுடைய மடவார்கட்கு விரும்பத் தகுந்தவராயிருந்த
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maala - இச்சொல்மாலையை
மேவி, Mevi - விரும்பி
சொல்ல வல்லார் பாவம், Solla Vallar Paavam - சொல்ல வல்லவர்களுடைய பாபங்கள்
நில்லா, Nilla - நிற்கமாட்டாமல்
வீயும், Veeyum - அழிந்துபோதும்.