திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1547 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது – இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் – த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை) 10 | வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10 | பதவுரை Show / Hideவாவி தடம் சூழ், Vaavi Thadam Sool - நடைவாவிகளாலும் தடாகங்களாலும் சூழப்பட்டதும் மணிமுத்தாறு, Manimuthaaru - மணிமுத்தாற்றை யுடையதுமான நறையூர், Naraiyoor - திருநறையூரி லெழுந்தருளியிருக்கிற நெடுமாலை, Nedumalaik - ஸர்வேச்வரனை நாவின் பரவி, Naavin Paravi - நாவினால் துதித்தும் நெஞ்சில் கொண்டு, Nenjil Kondu - நெஞ்சில் சிந்தித்தும் நம்பி நாமத்தை, Nambi Naamathai - அந்தத் திருநறையூர் நம்பியின் திருநாமம் விஷயமாக காவி தட கண் மடவார்கேள்வன், Kaavi Thada Kan Madavaarkelvan - கருநெய்தற் பூப்போன்று பரந்த கண்களையுடைய மடவார்கட்கு விரும்பத் தகுந்தவராயிருந்த கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maala - இச்சொல்மாலையை மேவி, Mevi - விரும்பி சொல்ல வல்லார் பாவம், Solla Vallar Paavam - சொல்ல வல்லவர்களுடைய பாபங்கள் நில்லா, Nilla - நிற்கமாட்டாமல் வீயும், Veeyum - அழிந்துபோதும். |