திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1548 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1548பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை கழித்து அருள வேணும் -என்கிறார்) 1
கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல் மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன் நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1
பதவுரை Show / Hide
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி, Naravu Ar Pozhil Soozh Naraiyur Nindra Nambi - தேன்மிக்க சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமிந்!, (- (அது தன்னுடைய கன்றானது))
கறவா மடநாகு, Karavaa Madaanagu - பால்சுரவாத இளம்பசுவை
தன் கன்று உள்ளினால் போல், Than Kankru Ullinaal Pol - நினைத்துக் கத்துமாபோலே
அடியேன், Adiyen - அடியேன்
மறவாது, Maravaadhu - ஓயாமல்
உன்னையே அழைக்கின்றேன், Unnaiye Azhaiykinren - உன்னையே சொல்லிக் கூப்பிடா நின்றேன்;
எந்தை பிரானே, Endhai Pirane - எனக்குத் தந்தையான பெருமானே!
எனை, Enai - என்னை
பிறவாமை, Piravaamai - (இனி ஸம்ஸாரத்தில்) பிறவாதபடி
பணி, Pani - செய்தருளாய்.