திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1548 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை கழித்து அருள வேணும் -என்கிறார்) 1 | கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1 | பதவுரை Show / Hideநறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி, Naravu Ar Pozhil Soozh Naraiyur Nindra Nambi - தேன்மிக்க சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமிந்!, (- (அது தன்னுடைய கன்றானது)) கறவா மடநாகு, Karavaa Madaanagu - பால்சுரவாத இளம்பசுவை தன் கன்று உள்ளினால் போல், Than Kankru Ullinaal Pol - நினைத்துக் கத்துமாபோலே அடியேன், Adiyen - அடியேன் மறவாது, Maravaadhu - ஓயாமல் உன்னையே அழைக்கின்றேன், Unnaiye Azhaiykinren - உன்னையே சொல்லிக் கூப்பிடா நின்றேன்; எந்தை பிரானே, Endhai Pirane - எனக்குத் தந்தையான பெருமானே! எனை, Enai - என்னை பிறவாமை, Piravaamai - (இனி ஸம்ஸாரத்தில்) பிறவாதபடி பணி, Pani - செய்தருளாய். |