திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1549 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1549பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது தான் மிகை அன்றோ –பிரளயம் கொண்ட பூமியை நீ எடுத்தது ஆர் கூப்பிட – நீ அறிந்த ஆபத்தும் விலக்காமையும் அன்றோ வேண்டுவது உனக்கு ரஷிக்கைக்கு – பிரளயம் கொண்ட பூமி ஆழ்ந்த இத்தனை அல்லது என்னை எடுக்க வேண்டும் -என்றதோ) 2
வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும் துற்றாக முன் துற்றிய தொல் புகழானே அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே –7-1-2
பதவுரை Show / Hide
வற்றா முத நீரொடு, Vatraa Muda Neerodu - ஒருகாலும் வடியாத கடல்களையும் (- (அருள் தந்திடு கிருபைசெய்தருளவேணும்.))
மால்வரை ஏழும், Maalvarai Ezhum - பெரிய குலபர்வதங்களேழையும்
முன், Mun - முன்பொருகால்
துற்று ஆக துற்றிய, Thuttru Aaga Thuttriya - ஒரு கபளமாக வாரி விழுங்கின
தொல் புகழோனே, Thol Pugazhone - சாச்வதமான கீர்த்தியையுடையவனே!
அற்றேன் அடியேன், Attren Adiyen - உனக்கே உரியேனாய்த தீர்ந்திருக்கிற அடியேன்
உன்னையே அழைக்கின்றேன், Unnaiye Azhaiykinren - உன்னையே சொல்லிக் கூப்பிடுகின்றேன்;
பெற்றேன், Pettren - இப்படி உன்னையே அழைக்கும்படியான பாக்யத்தைப் பெற்றேன்;