| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 155 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 4 | கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 | கஞ்சன், Kanchan - கம்ஸனுடைய புணர்ப்பினில், Punarpinil - கபடமான ஆலோசனையினாலே வந்த, Vandha - (நலிவதாக) வந்த கடிய, Kadiya - (அஸுரா வேசத்தாலே) க்ரூரமான சகடம், Sakadam - சகடத்தை உதைத்து, Udaithu - (திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுள்ள பேய் மகள், Pei Magal - பூதனை யானவள் துஞ்ச, Thunja - முடியும்படி முலை, Mulai - (அவளுடைய) முலையிலே வாய் வைத்த, Vai Vaitha - வாயை வைத்த பிரானே, Pirane - உபகாரகனே! மஞ்சளும், Manjalum - (உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)மஞ்சளையும் செங்கழுநீரின் வாசிகையும், Sengazhuneerin Vaasikaiyum - (நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும் நாறு சாந்தும், Naaru Saandhum - பரிமளிதமான சந்தநத்தையும் அஞ்சனமும், Anjanamum - (கண்களிலிடும்) மையையும் கொண்டு வைத்தேன், Kondu Vaithen - கொண்டு வைத்தேன் அழகனே! நீராட வாராய், Azhagane! Neeraada Vaaraay - அழகனே! நீராட வாராய் |