திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1552 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நர நாரணனே –ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை குடிக்குமா போலே இவர்களுக்காகா தபஸ் ஸூ பண்ணுமவனே- எங்கள் நம்பி-குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான பௌஷ்கல்யத்தை உடையவனே – உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை நானே போக்கித் தருகிறேன்-அஞ்சாதே கொள் -என்று மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் – சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்) 5 | வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5 | பதவுரை Show / Hideவில் ஏர் நுதல், Vil Aer Nuthal - வில்போன்ற நெற்றியையும் வேல் நெடு கண்ணியும், Veel Nedu Kanniyum - வேல்போன்று நீண்ட கண்களையுமுடையளான பிராட்டியும் நீயும், Neeyum - நீயுமாக கல் ஆர் கடு கானம், Kal Ar Kadu Kaanam - கற்கள் நிறைந்த கொடிய காட்டிலே திரிந்த, Thirindha - ஸஞ்சரித் களிறே, Kalire - மதயானைபோன்றவனே!, நல்லாய், Nallai - ஆச்ரிதவத்ஸலனே! நரநாராயணனே, Naranarayanane - நரநாராயணவதாரம் செய்தருளினவனே! எங்கள் நம்பீ, Engal Nambi - எங்கள் குறைதீர்க்கவல்ல பரிபூர்ணனே! உன்னை யான் வணங்கி தொழும் ஆறு, Unnai Yaan Vanangi Thozhum Aaru - அப்படிப்பட்டவுன்னை அடியேன் திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும் முறைமையை சொல்லாய், Sollaai - அருளிச் செய்யவேணும். |