திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1552 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1552பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நர நாரணனே –ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை குடிக்குமா போலே இவர்களுக்காகா தபஸ் ஸூ பண்ணுமவனே- எங்கள் நம்பி-குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான பௌஷ்கல்யத்தை உடையவனே – உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை நானே போக்கித் தருகிறேன்-அஞ்சாதே கொள் -என்று மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் – சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்) 5
வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5
பதவுரை Show / Hide
வில் ஏர் நுதல், Vil Aer Nuthal - வில்போன்ற நெற்றியையும்
வேல் நெடு கண்ணியும், Veel Nedu Kanniyum - வேல்போன்று நீண்ட கண்களையுமுடையளான பிராட்டியும்
நீயும், Neeyum - நீயுமாக
கல் ஆர் கடு கானம், Kal Ar Kadu Kaanam - கற்கள் நிறைந்த கொடிய காட்டிலே
திரிந்த, Thirindha - ஸஞ்சரித்
களிறே, Kalire - மதயானைபோன்றவனே!,
நல்லாய், Nallai - ஆச்ரிதவத்ஸலனே!
நரநாராயணனே, Naranarayanane - நரநாராயணவதாரம் செய்தருளினவனே!
எங்கள் நம்பீ, Engal Nambi - எங்கள் குறைதீர்க்கவல்ல பரிபூர்ணனே!
உன்னை யான் வணங்கி தொழும் ஆறு, Unnai Yaan Vanangi Thozhum Aaru - அப்படிப்பட்டவுன்னை அடியேன் திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும் முறைமையை
சொல்லாய், Sollaai - அருளிச் செய்யவேணும்.