திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1554 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னோடு ச கோத்ரிகளாய் தான் உகந்த ஊர் எல்லாம் -என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே – நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்) 7 | கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7 | பதவுரை Show / Hideநிதியே, Nithiye - நிதிபோன்றவனே! (- (உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,-)) திருநீர்மலை, Thiruneermalai - திருநீர்மலையி லெழுந்தருளியிருக்கிற நித்திலம் தொத்தே, Niththilam Thoththae - முத்துமாலைபோன்றவனே! எனக்கு, Enakku - அடியேனுக்கு நின் அருள் அல்லது, Nin Arul Allathu - உன்னுடைய கிருபையைத் தவிர்த்து கதி இல்லை, Gathi Illai - வேறொருபுகல் இல்லை; பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே, Pathiye Paravi Thozhum Thondar Thamakku Kathiye - திவ்யதேசங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே! |