திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1554 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1554பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னோடு ச கோத்ரிகளாய் தான் உகந்த ஊர் எல்லாம் -என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே – நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்) 7
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7
பதவுரை Show / Hide
நிதியே, Nithiye - நிதிபோன்றவனே! (- (உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,-))
திருநீர்மலை, Thiruneermalai - திருநீர்மலையி லெழுந்தருளியிருக்கிற
நித்திலம் தொத்தே, Niththilam Thoththae - முத்துமாலைபோன்றவனே!
எனக்கு, Enakku - அடியேனுக்கு
நின் அருள் அல்லது, Nin Arul Allathu - உன்னுடைய கிருபையைத் தவிர்த்து
கதி இல்லை, Gathi Illai - வேறொருபுகல் இல்லை;
பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே, Pathiye Paravi Thozhum Thondar Thamakku Kathiye - திவ்யதேசங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே!