திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1555 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிறர் என்னை பேசா நின்றார்கள் என்று கை விடலாம்படி இருக்கிறாய் அல்லையே நீ – முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே பலத்தோடு வ்யபசரியாதவனே -முளையாத வித்து -நிஷ்பலம் என்பதால் முளைக்கின்ற வித்தே -என்கிறார் உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது) 8 | அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8 | பதவுரை Show / Hideஅத்தா, Aththaa - ஸ்வாமியே! அரியே, Ariye - (விரோதிவர்க்கங்களை ஹரிக்குமவனே! என்று, Endru - என்று இப்படிப்பட்ட திருநாமங்களைச் சொல்லி உன்னை அழைக்க, Unnai Azaikka - நான் உன்னை அழைக்குமளவில் பிறர், Piraar - அயலார் என்னை, Ennai - இப்படி அழைக்கிற என்னைநோக்கி பித்தா என்று பேசுகின்றார், Piththaa Endru Pesugindraar - ‘அடா பித்தனே!’ என்று சொல்லுகிறார்கள்; முத்தே, Mutthae - முத்துப்போன்றவனே! மணி மாணிக்கமே, Mani Maanikkame - சிறந்த மாணிக்கம் போன்றவனே! முளைக்கின்ற வித்தே, Mulaikkindra Viththae - முளைக்கின்ற விதைபோலே பயனளிப்பவனே! உன்னை, Unnai - இப்படிப்பட்டவுன்னை நான், Naan - அடியேன் எங்ஙனம் விடுகேன், Engnganam Vidugae - எவ்விதமாக விட்டொழிவேன்? |