திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1556 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1556பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே – திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த திருப் பவளத்தை உடையவனே – இப்படி ஆபத் சகனான உன்னை எங்கனே மறக்கும் படி) 9
தூயாய் சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா ஆயா வலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –7-1-9
பதவுரை Show / Hide
தூயாய், Thuyyaai - பரிசுத்தனானவனே!
சுடர், Sudar - ஒளிவிடுகின்ற
மா மதி போல், Maa Mathi Pol - பூர்ண சந்திரன் போலே
உயிர்க்கு எல்லாம், Uyirkkum Ellam - ஸகலப்ராணிகளுக்கும்
தாய் ஆய் அளிக்கின்ற, Thaai Aay Alikkindra - தாய்போன்று அருள்புரிகின்ற
தண் தாமரை கண்ணா, Than Thaamarai Kanna - குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவனே!
ஆயா, Aayaa - கோபாலனே!
அலை நீர் உலகு ஏழும், Alai Neer Ulaku Ezhum - அலைகடல் சூழ்ந்த ஸப்த லோகங்களையும்
முன், Mun - முன்னொருகால்
உண்டவாயா, Undavaayaa - அமுது செய்த திருப்பவளத்தை யுடையவனே!
உன்னை, Unnai - இப்படிப்பட்ட வுன்னை
நான் எங்ஙனம் மறக்கேன், Naan Engganam Marakken - நான் எப்படிமறப்பேன்!