திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1556 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே – திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த திருப் பவளத்தை உடையவனே – இப்படி ஆபத் சகனான உன்னை எங்கனே மறக்கும் படி) 9 | தூயாய் சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா வலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –7-1-9 | பதவுரை Show / Hideதூயாய், Thuyyaai - பரிசுத்தனானவனே! சுடர், Sudar - ஒளிவிடுகின்ற மா மதி போல், Maa Mathi Pol - பூர்ண சந்திரன் போலே உயிர்க்கு எல்லாம், Uyirkkum Ellam - ஸகலப்ராணிகளுக்கும் தாய் ஆய் அளிக்கின்ற, Thaai Aay Alikkindra - தாய்போன்று அருள்புரிகின்ற தண் தாமரை கண்ணா, Than Thaamarai Kanna - குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவனே! ஆயா, Aayaa - கோபாலனே! அலை நீர் உலகு ஏழும், Alai Neer Ulaku Ezhum - அலைகடல் சூழ்ந்த ஸப்த லோகங்களையும் முன், Mun - முன்னொருகால் உண்டவாயா, Undavaayaa - அமுது செய்த திருப்பவளத்தை யுடையவனே! உன்னை, Unnai - இப்படிப்பட்ட வுன்னை நான் எங்ஙனம் மறக்கேன், Naan Engganam Marakken - நான் எப்படிமறப்பேன்! |