திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1557 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1557பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையிகோளாய் பாடுவது ஆடுவதாகவே ஸ்ரீ பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம்) 10
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே –7-1-10
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondir - பக்தர்களே! (- (விசும்பு உண்டு பரமபதம் கிடைக்கும்.))
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு, Vandu Aar Pozhil Soozh Naraiyur Nambikku - வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரி லெழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு
என்றும், Endrum - எக்காலத்தும்
தொண்டு ஆய், Thondu Aay - அடிமைபூண்டு
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த
தமிழ் மாலை இவை, Tamil Maalai Ivai - இத்தமிழ்ப் பாசுரங்களை
பாடுமின், Paadumin - பாடுங்கோள்
பாடி நின்று ஆட, Paadi Nindru Aada - (அப்படி) பாடியாடப்பெறில்
உந்தமக்கு, Undhamakku - உங்களுக்கு
துயர் இல்லை, Thuyar Illai - ஸம்ஸாரத் துன்பங்கள் இல்லையாய்விடும்;