திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1559 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1559பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் – நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ – நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் – ஸ்ரீ நரசிம்ஹ வேஷ பரிக்ரஹம் பண்ணின அன்று தொடங்கி இவர் உடைய ஹிருதயத்திலே காணும் கிட்டுவது) 2
ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-2
பதவுரை Show / Hide
ஓடா, Odaa - நாட்டில் எங்கும் நடையாடாத (- (ஓ நறையூர் நின்ற நம்பீ!- ;))
ஆள் அரியின் உரு ஆய், Aal Ariyin Uru Aay - நரஸிம்ஹரூபியாய்
என்றன் மாடே வந்து மருவி, Endran Maade Vandu Maruvi - என் பக்கல்வந்து பொருந்தி
அடியேன், Adiyen - அடியேனுடைய
மனம், Manam - மனத்தை
கொள்ள வல்ல மைந்தா, Kolla Valla Mainthaa - கவர்ந்து கொள்ளக் கூடிய மிடுக்கையுடையவனே!
பனுவல் கவிதை கொண்டு, Panoval Kavithai Kondo - இலக்கணம் வழுவாத கவிகளைக்கொண்டு
தொண்டர் தம்மை, Thondar Thammai - நீசர்களை
பாடேன், Paadeen - பாடுவது தவிர்ந்தேன்;
உன்னை அல்லால், Unnai Allaal - உன்னைத்தவிர (வேறொரு வரைக் கவிபாட)
நாடேன், Naadeen - முயலமாட்டேன்.