| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 156 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 5 | அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2 4-5 | நம்பி, Nambi - (பால சாபலத்தால்) பூர்ணனே! செப்பு, Seppu - பொற் கலசம் போன்ற இள மெல் முலையார்கள், Ila mel mulaiyaargal - இளமையான மெல்லிய முலையை யுடைய மாதர்கள் சிறுபுறம் பேசி, Sirupuram pesi - (உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி சிரிப்பர், Sirippar - பரிஹஸிப்பார்கள் (அன்றியும்) பாலில், Paalil - பாலிலே அக்காரம், Akkaaram - வெல்லக் கட்டியை கலந்து, Kalandhu - சேர்த்துப் (பிசைந்து) அப்பம், Appam - அப்பத்தையும் கலந்த, Kalandha - (அப்படியே) சேர்ந்த சிற்றுண்டி, Sitrundi - சிற்றுண்டியையும் சொப்பட, Soppada - நன்றாக நான் சுட்டு வைத்தேன், Naan suttu vaithen - நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதி ஏல், Thinnal uruthi ael - (நீ அவற்றை) தின்ன விரும்பினாயாகில் சொப்பட, Soppada - நன்றாக நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராட வேண்டும் பிரான், Piran - ஸ்வாமியே! சோத்தம், Soththam - உனக்கு ஓரஞ்சலி இங்கே வாராய், Inge vaaray - இங்கே வாராய் |