திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1562 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய ஹிருதயத்திலே புகுந்த உன்னைப் போக ஒட்டுவேனோ சேஷ பூதராவார் சேஷி செய்தபடி செய்யக் கண்டு இருக்குமவர்கள் அன்றோ ஒட்டேன் என்று நிர்பந்திக்கை உம்முடைய ஸ்வரூபத்துக்குப் போருமோ -என்ன – மடல் எடுக்க நினைப்பார் இது ஆம் இது ஆகாது என்று கார்யம் பார்த்தோ செய்வது – நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –-நீ முந்துற மடல் எடுத்து பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது – அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே) 5 | நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல ஒட்டேன்
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-5 | பதவுரை Show / Hideநீண்டாயை, Neendaayai - நெடுமாலாகிய உன்னை (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;)) வானவர்கள், Vaanavarkal - பிரமன் முதலியோர்கள் நினைந்து, Ninaindhu - தியானித்து ஏத்தி, Aethi - தோத்திரம்பண்ணி காண்பு அரிது, Kaanbu Aridhu - காண்பதானது அஸாத்யமான காரியம் ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு, Aandai Enru Aadharikkap Paduvaaykku - ‘எம்பெருமானே!’ என்று (தேவர்களால்) ஆதரித்துத் துதிக்கப்படுகின்ற உன்விஷயத்தில் நான் அடிமை பூண்டேன், Naan Adimai Poondhen - நான் அடிமைத் தொழில் செய்யப்பெற்றேன்; என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை, En Nenjin Ullae Pugundhaayai - எனது மனத்திலுள்ளே புகுந்திருக்கிற உன்னை போகல் ஒட்டேன், Pokal Ottaen - இனி வேறோரிடம் போக வொட்டேன்; உனக்கு, Unakku - உன் விஷயத்திலே நாண் தான் ஒழிந்தேன், Naan Thaan Ozhindhen - வெட்கமற்றவனானேன். |