திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1563 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி என் பக்கலிலே அருளைப் பண்ணின ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று) 6 | எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-6 | பதவுரை Show / Hideஎன் ஆர் உயிரே, En Aar Uyire - எனது அருமையான உயிர் போன்றவனே! (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;) (ஆகப் பத்துத்தலைமுறையாக)) அரசே, Arase - என்னை ஆள்பவனே! எனக்கு அருள் நந்தாமல் தந்த எந்தாய், Enakku Arul Nandamal Thanda Endathai - என் திறத்தில் கிருபையைக் குறைவின்றிச் செய்தருளின எம்பெருமானே! எம் தாதை தாதை, Em Thathai Thathai - நானும் என் தகப்பனும் அவன் தகப்பனும் அப்பால், Appaal - அவனுக்கு முன்புண்டான எழுவர், Ezhvar - ஸப்த புருஷர்களும் பழவடிமை வந்தார், Pazhavadi Mai Vandhaar - இயற்கையான அடிமையைச் செய்து வந்தவர்கள்; என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்தினுள்ளே வந்தாயை, Vandhaayai - வந்து சேர்ந்த உன்னை போகல் ஒட்டேன், Pokal Ottaen - இனி வேறிடம் போக வொட்டேன் |