திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1563 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1563பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகாதே கொள் -என்று காலைக் கட்டி வளைக்கலாம் படி என் பக்கலிலே அருளைப் பண்ணின ஸ்ரீ திரு நறையூரிலே வந்து நின்று ஆய்த்து-இவருக்கு அருளிற்று) 6
எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன் அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-6
பதவுரை Show / Hide
என் ஆர் உயிரே, En Aar Uyire - எனது அருமையான உயிர் போன்றவனே! (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;) (ஆகப் பத்துத்தலைமுறையாக))
அரசே, Arase - என்னை ஆள்பவனே!
எனக்கு அருள் நந்தாமல் தந்த எந்தாய், Enakku Arul Nandamal Thanda Endathai - என் திறத்தில் கிருபையைக் குறைவின்றிச் செய்தருளின எம்பெருமானே!
எம் தாதை தாதை, Em Thathai Thathai - நானும் என் தகப்பனும் அவன் தகப்பனும்
அப்பால், Appaal - அவனுக்கு முன்புண்டான
எழுவர், Ezhvar - ஸப்த புருஷர்களும்
பழவடிமை வந்தார், Pazhavadi Mai Vandhaar - இயற்கையான அடிமையைச் செய்து வந்தவர்கள்;
என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்தினுள்ளே
வந்தாயை, Vandhaayai - வந்து சேர்ந்த உன்னை
போகல் ஒட்டேன், Pokal Ottaen - இனி வேறிடம் போக வொட்டேன்