திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1564 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் – நீர் வளைக்கிறது என்ன மிடுக்கு கொண்டு என்ன – நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும்ந கச்சின் ந அபராத்யதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள்) 7 | மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-7 | பதவுரை Show / Hideநல் நெஞ்சம், Nal Nenjam - (அடியார் திறத்தில்) நல்ல ஹ்ருதயத்தை யுடையளான (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;)) அன்னம், Annam - அன்ன மென்னடையாளான பிராட்டி மன்னும், Mannum - பொருந்தி வாழ்கிற மன் அஞ்ச, Man Anja - க்ஷத்திரியர்களெல்லாரும் அஞ்சும்படியாக ஆயிரம் தோள், Aayiram Thol - (கார்த்த வீரியார்ஜுநனுடைய) ஆயிரந் தோள்களையும் மழுவின், Mazhuvin - கோடாவிப்படையினால் துணித்த, Thuniththa - அறுத்தொழித்த மைந்தா, Maindha - மிடுக்கனே? என் நெஞ்சத்துள், En Nenjaththul - எனது நெஞ்சினுள்ளே இருந்து, Irundhu - இருந்து வைத்து இனி, Ini - இனிமேல் இங்கு போய், Ingu Poi - இங்கு நின்றும் வேறோரிடம்போய் பிறர் ஒருவர், Piraar Oruthar - வேறொருவருடைய வல் நெஞ்சம், Val Nenjam - கடினமான நெஞ்சிலே புக்கு இருக்க, Pukku Irukka - புகுந்திருக்க ஒட்டேன், Ottaein - ஸம்மதிக்கமாட்டேன்; வளைத்துவைக்கேன், Valaithuvaikken - தடைசெய்கின்றேன். |