திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1565 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1565பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை குடைந்து வண்டு உண்ணும் -என்கிறபடியே உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே- அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ அவ் ஊரில் போக்யதை இருப்பது) 8
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய் இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-8
பதவுரை Show / Hide
நல் போது, Nal Podhu - நல்ல புஷ்பங்களிலே (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;))
வண்டு கிண்டும், Vandu Kintum - வண்டுகள் குடையப்பெற்ற
இமையோர், Imaiyor - நித்யஸூரிகள்
எப்போதும், Eppodhum - எக்காலத்திலும்
பொன்மலர் இட்டு, Ponmalar Ittu - நல்ல பூக்களை ஸமர்ப்பித்து
தொழுது, Thozhudhu - வணங்கி
தங்கள், Thangal - தங்களுடைய
கை போது கொண்டு இறைஞ்சி, Kai Podhu Kondu Irainji - புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்ஜலிசெய்து
கழல் மேல், Kazhal Mel - திருவடிகளிலே
வணங்க நின்றாய், Vananga Nindraai - ஆச்ரயிக்குமாறு நிற்பவனே!
இப்போது, Ipodhu - இன்று
என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்துள்ளே
புகுந்தாயை, Pugundhaayi - வந்துபுகுந்த வுன்னை
போகல் ஒட்டேன், Pokal Ottaen - வேறிடம் போகவொட்டேன்