திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1565 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விலஷணமான புஷ்பங்களிலே வண்டுகள் ஆனவை குடைந்து வண்டு உண்ணும் -என்கிறபடியே உள்ளே உள்ளே அவஹாகிக்கும் அத்தனை போக்கி வேறு ஒன்றில் போக ஒண்ணாத படி போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே- அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ அவ் ஊரில் போக்யதை இருப்பது) 8 | எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-8 | பதவுரை Show / Hideநல் போது, Nal Podhu - நல்ல புஷ்பங்களிலே (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;)) வண்டு கிண்டும், Vandu Kintum - வண்டுகள் குடையப்பெற்ற இமையோர், Imaiyor - நித்யஸூரிகள் எப்போதும், Eppodhum - எக்காலத்திலும் பொன்மலர் இட்டு, Ponmalar Ittu - நல்ல பூக்களை ஸமர்ப்பித்து தொழுது, Thozhudhu - வணங்கி தங்கள், Thangal - தங்களுடைய கை போது கொண்டு இறைஞ்சி, Kai Podhu Kondu Irainji - புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்ஜலிசெய்து கழல் மேல், Kazhal Mel - திருவடிகளிலே வணங்க நின்றாய், Vananga Nindraai - ஆச்ரயிக்குமாறு நிற்பவனே! இப்போது, Ipodhu - இன்று என் நெஞ்சின் உள்ளே, En Nenjin Ullae - எனது மனத்துள்ளே புகுந்தாயை, Pugundhaayi - வந்துபுகுந்த வுன்னை போகல் ஒட்டேன், Pokal Ottaen - வேறிடம் போகவொட்டேன் |