திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1566 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க தமக்கு இனிதாக நின்றது –எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே – வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் – அது செய்த படி தான் எங்கனே என்ன –நீ வர நிற்கையாலே நான் இப் பேறு பெற்றேன்) 9 | ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-9 | பதவுரை Show / Hideயான் ஆய், Yaan Aayi - எனக்கு அந்தராத்மாவாய் (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;)) என் தனக்கு ஆய், En Thanakku Aayi - எனக்கு விதேயனாய்க் கொண்டு அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - அடியேனுடைய மனத்தினுட் பிரவேசித்த தெனே, Thene - தேன்போல் இனியவனே! தீம் கரும்பின் தெளிவே, Theem Karumbin Thelivae - இனிமையான கரும்பின் சாறுபோன்றவனே! ஊன் ஏர் ஆக்கை தன்னை, Oon Aer Aakkai Thannai - மாம்ஸமயமான சரீரத்தை உழந்து, Uzhandhu - (பலவகைகளாலும்) சிரமப்பட்டு ஓம்பி வைத்தமையால், Oombi Vaiththamaiyaal - பேணிவைத்துக்கொண்டிருந்ததனால் என் சிந்தை தன்னால், En Sindhai Thannal - என்னுடைய மனத்தினால் நானே எய்த பெற்றேன், Naane Eytha Pettraen - (இப்போது உன்னை) நானே வந்தடையப்பெற்றேன். |