திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1566 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1566பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்த படியை அனுசந்திக்க அனுசந்திக்க தமக்கு இனிதாக நின்றது –எனக்கு சர்வ வித போக்யமுமாய் உள்ளவனே – வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி அது கொண்டு பெற இருக்கை அன்றிக்கே இந்த சரீரம் தன்னையே கொண்டு பிராபிக்கப் பெற்றேன் – அது செய்த படி தான் எங்கனே என்ன –நீ வர நிற்கையாலே நான் இப் பேறு பெற்றேன்) 9
ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால் நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-9
பதவுரை Show / Hide
யான் ஆய், Yaan Aayi - எனக்கு அந்தராத்மாவாய் (- (நறையூர் நின்ற நம்பீயோ!- ;))
என் தனக்கு ஆய், En Thanakku Aayi - எனக்கு விதேயனாய்க் கொண்டு
அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - அடியேனுடைய மனத்தினுட் பிரவேசித்த
தெனே, Thene - தேன்போல் இனியவனே!
தீம் கரும்பின் தெளிவே, Theem Karumbin Thelivae - இனிமையான கரும்பின் சாறுபோன்றவனே!
ஊன் ஏர் ஆக்கை தன்னை, Oon Aer Aakkai Thannai - மாம்ஸமயமான சரீரத்தை
உழந்து, Uzhandhu - (பலவகைகளாலும்) சிரமப்பட்டு
ஓம்பி வைத்தமையால், Oombi Vaiththamaiyaal - பேணிவைத்துக்கொண்டிருந்ததனால்
என் சிந்தை தன்னால், En Sindhai Thannal - என்னுடைய மனத்தினால்
நானே எய்த பெற்றேன், Naane Eytha Pettraen - (இப்போது உன்னை) நானே வந்தடையப்பெற்றேன்.