திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1567 | பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள்-இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் – அதுக்கு மேலே-போக பூமிகளிலே மேலாய் இருக்கிற ஸ்ரீ பரம பதத்திலே போய் இவ் வாத்மாவின் உடைய ஸ்வரூப அனுரூபமான முறையாலே நிரதிசய ஸ்வரூபா நந்திகளாய் பின்னை ஒரு நாளும் புநரா வ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவார்கள்) 10 | நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே –7-2-10 | பதவுரை Show / Hideநல் நீர் வயல் புடை சூழ் நறையூர், Nal Neer Vayal Pudai Soozh Naraiyoor - நல்ல நீரையுடைய கழனிகளாலே நாற்புறமுஞ் சூழப்பட்ட திருநறையூரில் நின்ற, Nindra - நித்யாவஸம் செய்தருள்கின்ற நம்பியை, Nambiyai - எம்பெருமான் விஷயமாக, கல் நீர மால் வரை தோள், Kal Neera Maal Varai Thol - ஒலிக்கின்ற அருவிநீரையுடைய பெரிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவரும் மங்கையர் கோன், Mangaiyar Koon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த) சொல் நீர, Sol Neera - கொண்டாடிச் சொல்ல வேண்டுவதையே ஸ்வபாவமாகவுடைய சொல் மாலை, Sol Maalai - இச்சொல் மாலைகளை சொல்லுவார்கள், Solluvaargal - கற்பவர்கள் சூழ் விசும்பில், Sozh Vizhumbil - பெரிய திருநாட்டில் நல் நீர்மையால், Nal Neermaiyaal - (நித்தியகைங்கர்யமாகிற) சிறந்த ஸ்வபாவத்தோடு கூடி நெடுங்காலம், Nedungkaalam - சாச்வதாமாக மகிழ்ந்து வாழ்வார், Magizhndhu Vaazvaar - பரமாநந்தங்கொண்டு வாழப்பெறுவர். |