திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1568 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1568பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற அடியேனான நான் – ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை – மனஸ் ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் – நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் – என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4- என்கிறபடியே களிக்கப் பெற்றேன்) 1
சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம் மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக் கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே –7-3-1
பதவுரை Show / Hide
சினம் இல், Sinam Il - கோபத்துக்கு இருப்பிடமாய் (- (நறையூர் நின்ற நம்பியை-;))
செம் கண், Sem Kan - சிவந்த கண்களையுடைரான
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
உயிர் மாள, Uyir Maala - உயிரிழந்து முடியும்படியாக
செற்ற, Settra - சீறின
வீல்லி என்று, Veelli Endru - வில்லை யுடையவனே! என்று
கற்றவர், Kattravar - அறிவுடையவர்கள்
தம் தம், Tham Tham - தங்கள் தங்களுடைய
மனம் உள் கொண்டு, Manam Ula Kondu - நெஞ்சிலே தியானித்து
என்றும் எப்போதும், Endrum Eppodhum - எக்காலத்திலும் எல்லா நிலைமைகளிலும்
நி்ன்று, Ninru - நிலைநின்று
ஏத்தும், Aethum - தோத்திரம் பண்ணும்படியாகவுள்ளவனும்
மா முனியை, Maa Muniyai - (அடியார்திறத்தில் இன்னமும் என் செய்வோமென்று, நெடிய சிந்தனைகளைச் செய்பவனும்
கனவில், Kanavil - மாநஸாநுபவத்தில்
ஏழ் மரம் எய்த, Ezha Maram Eytha - ஸப்தஸால விருஷங்களை அம்பு எய்து துளைபடுத்தின
மைந்தனை, Mainthanai - மிடுக்குடையவனும்
நனவில் சென்றார்க்கும், Nanavil Senraarkkum - கண்மலரப் பெற்றவர்களான சிறந்த ஞானிகட்கும்
நண்ணற்கு அரியானை, Nannarku Ariyanai - கிட்டக் கூடாதவனுமான
அடியேன் நான், Adiyen Naan - அடியேனாகிய நான்
கனவில், Kanavil - மாநஸாநுபவத்தில்
இன்று கண்டேன், Indru Kandein - இன்று காணப்பெற்றேன்;
கண்டமையால், Kandamaiyala - காணப்பெற்றதனால்
என் கண் இணைகள், En Kan Inaihal - எனது இரண்டு கண்களும்
களிப்ப, Kalippa - ஸந்தோஷிக்க
களித்தேன், Kalitthen - நானும் ஸந்தோஷித்தேன்.