திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1569 | பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி பூர்ணனாய் இருந்து வைத்து என் பக்கலில் அன்பைப் பண்ணினவனை – அவன் என்பக்களில் அன்பைப் பண்ணி மேல் விழா நிற்க நான் அவனை ஒழிய வேறு சிலரை ஆதரிப்பேனோ) 2 | தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்
காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி
யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே –7-3-2 | பதவுரை Show / Hideதாய் நினைந்த கன்றே ஒக்க, Thaai Ninaindha Kanre Okka - தன் தாயாகிய பசுவை நினைக்கும் கன்றுபோல என்னையும், Ennaiyum - அடியேனையும் தன்னையே நினைக்க செய்து, Thannaie Ninaikka Seidhu - (எம் பெருமானாகிய) தன்னையே சிந்திக்கும்படி பண்ணி (அதற்கு மேலே) தான் எனக்கு ஆய் நினைந்து, Thaan Enakku Aay Ninaindhu - எனக்கு வேண்டிய நன்மைகளை யெல்லாம் தானே சிந்தித்து அருள் செய்யும் அப்பனை, Arul Seyyum Appanai - கிருபை பண்ணும் உபகாரகனும், அன்று, Andru - முன்பொருகாலத்தில் இ வையகம், I Vaiyagam - இவ்வுலகத்தை யெல்லாம் உண்டு, Undu - விழுங்கி (பின்பு) உமிழ்ந்திட்ட, Umizhndhitta - வெளிப்புறப்பட விட்ட வாயனை, Vayanai - திருப்பவளத்தை யுடையவனும், மகரம் குழை காதனை, Makarum Kuzhai Kaadhani - மகர கு்ணடலங்களைத் திருச்செவிகளில் அணிந்துள்ளவனும் மைந்தனை, Mainthanai - நித்யயுவாவும் மதிள் கோவல் இடை கழி ஆயனை, Mathil Koval Idai Kazhi Aayenai - திருமதில்களை யுடைய திருக்கோவலூரிடை கழியில் கோபாலனாய் நிற்பவனும் அமரர்க்கு, Amararukku - நித்யஸூரிகளினிடையே அரி ஏற்றை, Ari Aetrai - சிங்கம் போலவும் காளை போலவும் செருக்குத் தோற்ற விருப்பவனும் என் அன்பனை அன்றி, En Anbanai Andri - என்னிடத்தில் அன்புடையவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து ஆதரியேன், Aadharien - (வேறொருவனை) ஆதரிக்கமாட்டேன். |