| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 157 | பெரியாழ்வார் திருமொழி || (2-4 நீராட்டம்) - அகத்திலுள்ளார் எல்லாரும் அந்ய பரரம்படியாக முதலிலே எண்ணெய்க் குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி – தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக் கிள்ளி, ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! என்றபடி. கண் – இமைக்கு ஆகுபெயர். கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை மாறி விழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம். 6 | எண்ணைய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே வண்ணம் அழகியபிரானே மஞ்சனமாட நீ வாராய் – 2-4 6 | எண்ணெய் குடத்தை, Ennai kudathai - எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டி, Urutti - உருட்டிவிட்டு இள பிள்ளை, Ila pillai - (உறங்குகிற) சிறு குழந்தைகளை கிள்ளி, Killi - கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, Ezhuppi - (தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து கண்ணை, Kannaai - கண் இமையை புரட்டி விழித்து, Puratti vizhithu - தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து கழை கண்டு, Kazhai kandu - பொறுக்க முடியாத தீம்புகளை செய்யும், Seyyum - செய்து வருகிற பிரானே, Pirane - ஸ்வதந்த்ரனே! கனிகள், Kanigal - (நில்ல) பழங்களை உண்ண, Unna - (நீ) உண்ணும்படி தருவன், Tharuvan - (உனக்குக்) கொடுப்பேன் ஒலி, Oli - கோஷியா நின்ற கடல், Kadal - கடலினுடைய ஓதம், Otham - அலைகளை யுடைய நீர் போலே, Neer pole - ஜலம் போலே வண்ணம் அழகிய, Vannam azhagiya - திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற நம்பீ, Nambi - உத்தம புருஷனே! மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |